Friday, February 15, 2008

ஏன் வீசி எறிந்தாய்???

கண்களில் கசிந்தது
நெஞ்சில் வடிந்தது
தேகத்தில் உறைந்தது
உந்தன் காதல்

உறவு தொலைத்தேன்
உறக்கம் தொலைத்தேன்
எதையோ எல்லாம்
இதற்காய் தொலைத்தேன்

வாழ்வில் வசந்தம்
யாவும் இழந்தேன்
மொத்தத்தில் உன்னில்
என்னை தொலைத்தேன்

இத்தனையும் செய்த
எந்தன் மனதை இன்று
ஏனோ வீசி எறிந்தாய்???

No comments: