Tuesday, February 12, 2008

i miss you

உன் உள்ளம் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்... ஆனால்,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது..!
நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்.

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை...
காதல்.

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி.....

வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி மாதிரி
லேசா பிடித்தால் பரந்திடும்...
இருக்கிப ஢பிடித்தால் இறந்திடும்...
கவணமாக கையாள வேண்டும்.

நீ யாருக்காக வாழ்கிறாயோ...
அவர்களக்காக சிலவற்றை விட்டுக்கொடு!
உனக்காக யார் வாழ்கிறார்களோ...
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுத்து விடாதே..!

காதல் செய்ய...
பணம் தேவையில்லை,
அழகு தேவையில்லை,
கல்வி தேவையில்லை,
மொழி தேவையில்லை,
"கண்கள" மட்டும் இருந்தால் போதும்!
அழுவதற்கு...

உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏன் என்றால்..
கை இல்லாதவனக்கும்
எதிர் காலம் உண்டு..!

சாதாரண மனிதன்
விழித்திருக்கும் போது தூங்குகிறான்,
சாதிக்கப் பிறந்தவன்
தூங்கும்போதும் விழித்திருக்கிறான்..!
அலக்ஸாண்டர்.

நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தைப் பார்,
ஓடுவது முள் அல்ல,
உன் வாழ்க்கை....

அனுமதி கேட்கவும் இல்லை!
அனுமதி வாங்கவும் இல்லை!
ஆனால்,
வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்!
மண்ணில் மழைத்துளி...!
வாழ்க்கையில் நீ சந்திக்கும்
ஒவ்வொரு மனிதனும்
உனக்கு ஆசான்(குரு)
நீ கற்றுக் கொள்ள
ஏதாவது ஒன்று இருக்கும்...!

No comments: