Saturday, February 23, 2008

Google search







Google















Monday, February 18, 2008

MY BEST FRIEND

True friends are rare to find
True friends are always very kind.
True friends are ornaments so beautiful.
True friends always make us cheerful.
True friends are the work of perfection.
True friends give us right direction.
True friends always shine like moon.
True friends are the greatest boon

Sunday, February 17, 2008

MY NEW SITE

Friday, February 15, 2008

சிந்திப்போம்

சிந்திப்போம் இளைஞனே!
வரதசட்சணை வாங்கித்தான்
நம்வாழ்வை வளமாக்க முடியுமென்றால்
அவ்வாழ்வு நமக்குத் தேவைதானா?
ஒரு படகு நீரில் மிதக்க
இன்னொரு படகு நீரில் முழ்க வேண்டுமா?
இன்று நித்ய கன்னியாய்
காலந்தள்ளும் கன்னிகளெத்தனை?
கேட்டால் குருபலம் அமைய வேண்டுமேயென்பீர்
குருபலம் எங்கே அமையும்
கையில் பணமும்,
கழுத்தில் நகையும் இருந்தால்தானே,
குருபலம் அமையும்
நமக்குப் பெண் வேண்டும்
திருமணமாகும்வரை அம்மா,
பின் மனைவி
ஆனால் தனக்குப் பிறக்கும்
குழந்தை மட்டும்பெண்ணாய் இருக்கக்கூடாது.
இதுஎந்த வகையில் நியாயம்.
இளைஞனேநாமும் சிந்திப்போம்,
சபதமேற்போம்
வரதட்சணை வாங்குவதில்லையென்று!.

மௌனம

நினைவுக் கிளைகள் வெட்ட வெட்ட
வளர்கிறதே

வளரும் நினைவுகள் அழிக்க அழிக்க
உருவாகிறதே

உருவான உணர்வு திரும்ப திரும்ப
தோன்றுகிறதே

தோன்றும் மௌனத்தில் மனது
ஊமையானதே

ஊமை ஆனதில் மனது
மௌனமானதே.....

பிப்ரவரி 14

என் காதல் அழகி
==================

பிப்ரவரி 14
அனைவருக்கும்
காதலர் தினம்
உன்னைக் கண்ட
நாள்முதல் என்
கண்களுக்கு நீ
வண்ண மலர்கள்
பூத்துக் குலுங்கும்
நந்தவனம்!

ஒரு மழைக்கால
பெளர்ணமி நாளில்
நாம் முதன்முதலில்
சந்தித்தோம்..
வானம் இருள் சூழ்ந்தது...
பூமி பிரகாசித்தது..
காரணம்
நிலவாக நீ!

சற்று முன்
அவள் கடந்து
சென்ற பாதை
எந்த சலனமுமின்று
அமைதியாக...
ஆனால்
அதிவேக ரயிலொன்று
கடந்து சென்றதைப்போல்
அதிர்கிறது
என்னிதயம்!

காதல் மட்டுமே
வாழ்க்கை
இல்லைதான்...
ஆனால் காதல்
இல்லையென்றால்
வாழ்க்கையே
இல்லை என்று
சொல்கிறது மனது!

உன் பெயர் தவிர
மற்ற அனைத்தும்
தவறாகவே
எழுதப் படுகின்றன
எந்தன் பேனாவால்!

சாதாரண
கல்லைக்கூட
வைரமாய்
மின்னச் செய்யும்
ஆற்றல் கொண்டது
நம் காதல் கொண்ட
இதயங்கள்...!

ஆத்மாவும் ஆத்மாவும்
ஒன்றிணைந்து
நீ பார்த்ததில்லையே?
நம் உதடுகள்
ஒன்றிணைந்தால்
ஆத்மாக்கள்
ஒன்றிணையுமாம்...!

காதலி என்று
சொன்னால்
ஒட்டாத உதடுகள்
மனைவி என்று
சொன்னால் ஒட்டுமாம்
வா மணம்
செய்து கொள்வோம்!

எப்படி சொல்வது?????

சேலை அணிந்த மாது ஒருத்தி
ஒரு ஆணை சோலை என நம்பி வாழ
அவனோ நான் சோலை இல்லை
சோலையில் இருக்கும் பூக்களில்
தேன் உள்ளவரை மட்டுமே அதை
நுகரும் வண்டு என பதிலளித்தால்
அந்த மாதுவின் நிலை என்ன?
கல்லறையா???
மறுமணமா???
விதி என்பதா???
சதி என்பதா???
எப்படி சொல்வது????

ஏன் வீசி எறிந்தாய்???

கண்களில் கசிந்தது
நெஞ்சில் வடிந்தது
தேகத்தில் உறைந்தது
உந்தன் காதல்

உறவு தொலைத்தேன்
உறக்கம் தொலைத்தேன்
எதையோ எல்லாம்
இதற்காய் தொலைத்தேன்

வாழ்வில் வசந்தம்
யாவும் இழந்தேன்
மொத்தத்தில் உன்னில்
என்னை தொலைத்தேன்

இத்தனையும் செய்த
எந்தன் மனதை இன்று
ஏனோ வீசி எறிந்தாய்???

பிரிவின் வலி

காத்திருக்க காத்திருக்க தான்
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக‌
அப்பொழுதும் அறியவில்லை நீ
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும்
பரிட்ஷை என்று பிரித்துச்சென்ற‌
காலனுக்கும் புரியவில்லை என் மனக்கவலை....

டாக்டரும் வக்கீலும்

வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!

டாக்டர்: இல்லை

வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.

வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?

டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.

கணக்கு போட கற்றுக் கொள்வோம





ரொம்ப புத்திசாலி மாணவனா இருக்கானே, என்னைப் போலவே!

சிரிக்கவும் சிந்திக்கவும

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வயலில் இறங்கி வேலை செய்வார். சிறு சிறு தொழில்கள் செய்வார். எந்தவித பெருமையும் படமாட்டார்.

ஒரு சமயம் அவர் புகை வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்தது. அப்போது ஒரு பெண்மணி டால்ஸ்டாயைக் கைதட்டிக் கூப்பிட்டார்.

""ஐயா, என் கணவர் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்றார். நேரமாகிறது. இன்னும் திரும்பி வரவில்லை. புகைவண்டி புறப்படப் போகிறது. தயவு செய்து உணவு விடுதிக்குச் சென்று அவரை அழைத்து வாருங்கள். அதற்கான கூலி கொடுத்துவிடுகிறேன்,'' என்று கூறித் தனது கணவரின் அடையாளங்களைக் கூறினார்.

உடனே பால்ஸ்டாய் விரைந்து சொன்று அந்தப் பெண்மணியின் கணவரை அழைத்து வந்து விட்டார். அதற்காக ஒரு சிறு தொகையை அப்பெண் கொடுத்தாள். டால்ஸ்டாயும் அதைப் பெற்றுக் கொண்டார். சற்று நேரம் கழித்துத் தான் தன்னிடம் கூலி பெற்றவர் புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் என்பது அந்த பெண்மணிக்கு தெரியவந்தது.

உடனே அப்பெண்மணி இறங்கி பரபரப்புடன் வந்து, ""ஐயா, தயவுக்கூர்ந்து என்னை மன்னியுங்கள். தாங்கள்தான் டால்ஸ்டாய் என்ற உண்மை தெரியாமல் போய்விட்டது,'' என்றாள்.

அதற்கு டால்ஸ்டாய், ""அம்மணி, என்னை நீங்கள் ஒரு கூலிக்காரனாக நினைத்ததால் எனக்கொன்றும் தாழ்மை வந்துவிடவில்லை. நான் தான் டால்ஸ்டாய் என்று தெரிந்து கெண்டதற்காக நீங்கள் கொடுத்த கூலியைத் திரும்பக் கேட்டால் தரமாட்டேன். அது என் உழைப்பில் வந்த பணம்,'' என்று கூறிவிட்டுச் சிரித்தார்.

என் அன்பே….......!

என் அன்பே….......!

உனக்கு நான்
கடிதமே எழுதுவதில்லை
என வருத்த்ப்பட்டாயே.!
காரணம் சொல்லவா… கண்ணே…
தபால்காரருக்கு தெரியுமா?
உன் முகவறியில்
முத்திரை குத்துவது
எனக்கு வலிக்குமென்று

இன்று வரும்

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது...?

Tuesday, February 12, 2008

காதல் வைத்து

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஜயோ நான் தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்த்த மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த குரக்கத்தில் தான்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடீ
உன்னிடத்தில் நான் போசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்"

kathal

மதங்களை காதலி
தீவிரவாதியாகதே!
ஜாதியைக் காதலி (ஆண், பெண்)
வெறிக் கொள்ளாதே!
நிறத்தைக் காதலி - அதில்
உயர்வுத் தாழ்வு காணாதே!
மண்ணைக் காதலி - அதற்காக
உறவைப் பகைக்கொள்ளாதே!
நாட்டைக் காதலி - நாட்டை
இழி நிலைக்குத் தள்ளாதே!
இயற்கையைக் காதலி - அதை
அழிக்க நினைக்காதே!
தாயைக் காதலி
காரியவாதி யாகாதே!
தந்தையைக் காதலி
பணப்பையை பார்க்காதே!
உடன்பிறப்பைக் காதலி - அவர்களால்
ஏற்படும் தீமையை நினைவில் கொள்ளாதே!
பணத்தைக் காதலி - அதுவே
வாழ்க்கை எனக் கொள்ளாதே!
மனதைக் காதலி
வெளி அழகைப் பார்க்காதே!
நல்லதைக் காதலி
தீயதை அணுகவிடாதே!
காதலை காதலி
கைவிட்டுவிடாதே!

LOVE ROMANCE

எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.

* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...

* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.

* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.

* இன்னொரு விஷயங்க... தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.

* என்னங்க! இப்பவே ரெடி ஆய்ட்டீங்க போல!!!

i miss you

உன் உள்ளம் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்... ஆனால்,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது..!
நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்.

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை...
காதல்.

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி.....

வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி மாதிரி
லேசா பிடித்தால் பரந்திடும்...
இருக்கிப ஢பிடித்தால் இறந்திடும்...
கவணமாக கையாள வேண்டும்.

நீ யாருக்காக வாழ்கிறாயோ...
அவர்களக்காக சிலவற்றை விட்டுக்கொடு!
உனக்காக யார் வாழ்கிறார்களோ...
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுத்து விடாதே..!

காதல் செய்ய...
பணம் தேவையில்லை,
அழகு தேவையில்லை,
கல்வி தேவையில்லை,
மொழி தேவையில்லை,
"கண்கள" மட்டும் இருந்தால் போதும்!
அழுவதற்கு...

உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏன் என்றால்..
கை இல்லாதவனக்கும்
எதிர் காலம் உண்டு..!

சாதாரண மனிதன்
விழித்திருக்கும் போது தூங்குகிறான்,
சாதிக்கப் பிறந்தவன்
தூங்கும்போதும் விழித்திருக்கிறான்..!
அலக்ஸாண்டர்.

நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தைப் பார்,
ஓடுவது முள் அல்ல,
உன் வாழ்க்கை....

அனுமதி கேட்கவும் இல்லை!
அனுமதி வாங்கவும் இல்லை!
ஆனால்,
வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்!
மண்ணில் மழைத்துளி...!
வாழ்க்கையில் நீ சந்திக்கும்
ஒவ்வொரு மனிதனும்
உனக்கு ஆசான்(குரு)
நீ கற்றுக் கொள்ள
ஏதாவது ஒன்று இருக்கும்...!

நட்பு......

உன்னிடம் பேசும்வரை
என் மனம் என்னிடம்
உன்னிடம் பேசியபின்
என் மனம் எவ்விடம்......????
தேடினேன்......தேடினேன்......
கண்டேன் அதை
உன் நட்பின் பூங்காவில்.......!
உன் நட்பின் ஒளியால்
என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின......!
என் கனவுகள் கவிதையாயின
அன்பு தோழனே.......
வெண்மதியை தூது அனுப்புகிரேன்
உன் நட்பிற்கு நன்றி சொல்ல.........!!

நட்பு

தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது தொடுதலின் அர்த்தங்களை எந்தமொழி பேசிவிடும்! எனது காதலியை உனக்கு நான் அறிமுகம் செய்து வைத்த போது நீ விழுங்கிய எச்சிலில் இருந்தது நமக்கான நட்பு. பேருந்து நிறுத்தத்திற்குச் சற்றுத் தள்ளி நின்று பேசுகிறவர்கள் காதலர்கள். நிறுத்தத்திலேயே பேசுகிறவர்கள் நண்பர்கள். கண்களை வாங்கிக் கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள் கண்களை வாங்கிக் கொண்டு உன்னைப் போல் கண்கள் தருகிறவள்தான் நட்பாகிறாள். என் துணைவியும் உன் கணவரும் கேட்கும்படி நம் பழைய மடல்களையெல்லாம் படித்துப் பார்க்க மழை தொடங்கும் ஒரு மாலைநேரம் வேண்டும் ஆய்வை முடிக்கிறவரை காதலனை வரவேண்டாம் என்று கட்டளையிட்டாய் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்று என்னிடம் கெஞ்சினாய் உன்னைக் காதலிப்பவனும் எவ்வளவு உயர்ந்தவன் ! உணர்ந்து கொண்ட மெளனத்திற்கென்றே ஒரு புன்னகை இருக்கத்தான் செய்கிறது என்பதை அவன்தானே எனக்குச் சொல்லிக் கொடுத்தான் ! என்றும் அன்புடன்...

Monday, February 11, 2008

download more Tamil movies

Tamilboost

Do you know Meaning of A-B-C-D-E-F-G ?

This is Realy True for ever


This is Realy True for ever

நீ எனக்கு நட்பாக வேண்டும

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்

Friday, February 8, 2008


Indiralohathil Na Azhagappan


Indiralohathil Na Azhagappan - Vadivel, Shreya
Indiralohathil Na Azhagappan - Vadivel, Shreya
Part 1 Part 2 Part 3 Part 4 Part 5





Sunday, February 3, 2008

இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!

நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையு‌ம், பான‌ங்களையு‌ம் சா‌ப்‌பிடுவத‌ன் மூல‌ம் உட‌ல் பருமனை‌க் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பெ‌ல்‌ஸ்‌லி, ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி ஆ‌கியோ‌ர் தலைமை‌யிலான ஆ‌ய்வு‌க் குழு‌வின‌ர் குறை‌ந்த கலோ‌ரி அளவு கொண்ட இ‌னி‌ப்பு‌ச் ச‌த்துக‌ள், ச‌‌க்‌தி‌யி‌ன் அட‌ர்‌த்‌தி த‌ன்மை, ‌திரு‌ப்‌தி‌த் த‌ன்மை ஆ‌கியவை‌த் தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் இனிப்பு அளவைக் குறை‌த்து‌க் கொ‌ண்டாலே உட‌ல் பருமனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது எ‌ளிது எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

குறை‌ந்த கலோ‌ரி ‌‌கொ‌ண்ட இ‌‌‌‌‌னி‌ப்பு உணவுகள் பெரு‌ம்பாலான பான‌ங்க‌ளி‌ன் கலோ‌ரி அளவை பூ‌ஜ்ய‌ம் அளவு‌க்கு குறை‌த்து ‌விடு‌ம். அதே‌ப்போ‌ன்று நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உண‌வி‌ன் கலோ‌ரி ச‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி‌யி‌ன் அளவைய‌ம் குறை‌க்‌கி‌ன்றன. வே‌தி‌ப் பொரு‌ள் கல‌ந்த பான‌ங்களையு‌ம், குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து உ‌ள்ள உணவு வகைகளை அ‌திகமாக சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌ற்போதைய உணவு சா‌ப்‌பிடு‌ம் நெ‌றிமுறையாக இ‌ப்போது உ‌ள்ளது எனவு‌ம் ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி கூ‌றியு‌ள்ளா‌ர்.
இத‌ற்கு மு‌ந்தைய ஆ‌ய்வுக‌ளி‌லு‌ம் குறை‌ந்த இ‌னி‌ப்பு ச‌த்து‌க்கொ‌ண்ட உணவு வகைக‌ள் உட‌ல் எடையை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த உதவு‌ம் மு‌க்‌கியமான வ‌ழியாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மரு‌த்துவ‌ர் ஜா‌ர்‌ஜ் ‌ப்ளா‌க்பே‌ன் நட‌த்‌திய சோதனை‌யி‌ல், குறை‌ந்த கலோ‌ரி கொ‌ண்ட ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் எ‌ன்ற இ‌னி‌ப்பு‌ச் ச‌த்தை உண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டவ‌ர்க‌ளி‌ன் உட‌ல் எடையை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் தெ‌ரி‌ந்ததாகவு‌ம், கு‌ண்டான பெ‌ண்க‌‌ளி‌ன் உட‌ல் எடையை‌க் ‌நீ‌ண்ட கால அடி‌ப்படை‌யி‌ல் க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் உத‌வியது தெ‌ரிய வ‌ந்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் 20 முத‌ல் 60 வயது ‌நிர‌ம்‌பிய 168 கு‌ண்டு‌ப் பெ‌ண்க‌ள் இர‌ண்டு ஆ‌ண்டு கால‌ம் ஈடுபடு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த 168 பெ‌ண்களுமே குறை‌ந்த கலோ‌ரி ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் இ‌னி‌ப்பு‌ச் ச‌த்து‌ப் பொரு‌ள் கல‌ந்த உணவு, பான‌ங்க‌ள் த‌ங்க‌ள் உட‌ல் எடை குறை‌ப்‌பி‌லு‌ம், ‌நீ‌ண்ட கால அள‌வி‌ல் உட‌‌ல் எடையை க‌ட்டு‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்கவு‌ம் உதவவுதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ம‌ற்றொரு ஆ‌ய்‌வி‌ல் ச‌‌க்ராலோ‌ஸ் எ‌ன்ற குறை‌ந்த கலோ‌ரி ச‌த்து இ‌னி‌ப்பூ‌ட்டு‌ம் பொரு‌ட்க‌ள் கல‌ந்த உணவை சா‌ப்‌பி‌ட்ட குழு‌ந்தைக‌‌ளி‌ன் நடவடி‌க்கைக‌ள் போதுமான அளவ‌ி‌ற்கு அ‌திக‌ரி‌க்க உத‌வியது‌ட‌ன், குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை கு‌றி‌யீடு குறைவத‌ற்கு‌ம் காரணமாக இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப் ப‌‌ட்டு‌ள்ளது.
அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கு‌ண்டானவ‌ர்க‌ளி‌ன் ‌வி‌கித‌த்‌தி‌ற்கு‌ம், த‌ற்போது உண‌வி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌னி‌ப்பு‌த் த‌ன்மை‌க்கு‌ம், உண‌வி‌ல் ‌நீ‌க்க‌ப்பட வே‌ண்டிய அளவு இ‌னி‌ப்பு‌ச் ச‌த்‌தி‌ன் அளவு‌க்கு‌ம் தொட‌ர்பு இரு‌ப்பதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ள்ளா‌ர்.
வாடி‌க்கையாள‌ர்களு‌க்கு யா‌ர் சொ‌ல்வதை ந‌ம்புவது எ‌ன்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கி‌ன்றது. சா‌ப்‌பிடு‌ம் அள‌வி‌ல் கலோ‌ரி க‌த்தை குறை‌ப்பது, நா‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் உணவு வகைக‌ளி‌ல் கலோ‌ரி ச‌த்து குறைவானவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்வது, உட‌ற் ப‌யி‌ற்‌சியை அ‌திக‌ரி‌ப்பது ஆ‌‌கிய மூ‌ன்‌று‌ம் உட‌ல் எடையை‌க் குறை‌க்க உதவு‌ம் எ‌ன்று சுகாதார வ‌ல்லுந‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

LIFE, LOVE...

LIFE IS A STAIN
LOVE IS A PAIN
WORK IS A BRAIN
FAMILY IS A CHAIN-BUT
FRINDSHIP IS A GAIN